முகப்பு இலங்கை இலங்கை அசத்தல் வெற்றி – மெண்டிஸின் சதத்துடன் தொடரை கைப்பற்றியது!
இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

இலங்கை அசத்தல் வெற்றி – மெண்டிஸின் சதத்துடன் தொடரை கைப்பற்றியது!

பகிரவும்
பகிரவும்

பல்லகலையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை 2–1 என வெற்றிகொண்டது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசால் மெண்டிஸின் அற்புத சதத்துடன் 285 ரன்கள் சேர்த்தது. பதிலுக்கு வங்கதேசம், இலக்கை அடைய முடியாமல் 186 ரன்களுக்கு சுருண்டது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டியில், மெண்டிஸ் 114 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். அவர் விளையாடிய சீரான மற்றும் பொறுப்புள்ள ஆட்டம் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

“இன்று முழு இன்னிங்ஸும் ஆடவேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கினேன்,” என்று போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கூறினார்.

பின்னர் பந்து வீச்சில் துஷ்மந்த சேமீரா – 3 விக்கெட்டுகள், அசித பெர்னாண்டோவும் அதேபோல 3 விக்கெட்டுகள் – வங்கதேச பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர்.
வங்கதேசம் ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஷான்டோவும், மற்ற முன்னணி வீரர்களும் விரைவில் வெளியேறினர்.

“இந்த வெற்றி நமக்கு மிக முக்கியமான ஒன்று. மெண்டிஸின் ஆட்டம்எம்மை முன்னணிக்கு அழைத்துச்சென்றது,” என்று அணித் தலைவர் அசலங்கா பெருமிதமாகக் கூறினார்.


வங்கதேச தலைவர் மெஹிதி ஹசன்: “அழுத்தம் காரணமாக தோல்வி ஏற்பட்டது. ஆனால் இளம் வீரர்களுடன் நம்பிக்கையுடன் தொடருகிறோம்.” என்று கூறினார்.

2023 உலகக் கோப்பையில் ஏமாற்றம் தந்த இலங்கை அணி, அதன் பிறகு 9 ஒருநாள் தொடரில் 7-இல் வெற்றி பெற்று, 50 ஓவர் கிரிக்கெட்டில் மீண்டும் வலிமையாக திகழ்கிறது. இது இலங்கை ரசிகர்களை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...