முகப்பு இலங்கை இலங்கையில் பால் மா விலை ஒரே இரவில் சடுதியாக உயர்வு – மக்கள் அவதி!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

இலங்கையில் பால் மா விலை ஒரே இரவில் சடுதியாக உயர்வு – மக்கள் அவதி!

பகிரவும்
பகிரவும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% வரி விதிக்கப்படும் என அறிவித்த சில மணி நேரங்களுக்குள், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் (Milk Powder) விலை இலங்கையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் இன்று (ஜூலை 10) ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது:

“ஒரே இரவில் ஒரு பாக்கெட் பால் மாவுக்கு ரூ.100 – ரூ.150 வரை விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு நாங்கள் இறக்குமதி நிறுவனங்களை குற்றம் கூறவில்லை. ஏனெனில் தற்போது ஒரு கிலோ பால் மா மீது ரூ.700 வரி விதிக்கப்பட்டிருக்கிறது.”

அவரது கூற்றுப்படி, பால் மா என்பது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட பலருக்கும் அன்றாடம் தேவையான முக்கிய உணவுப் பொருள் ஆகும். இந்த நிலையில் விலை கட்டுப்பாடின்றி உயர்வது, சாதாரண குடும்பங்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கின்றது.

“இப்போ பால் மா விலைகள், நிர்ணயமற்ற ‘மிதக்கும் விலை’ மாதிரியாக போய்விட்டன. வணிக அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

தேசிய நுகர்வோர் முன்னணி, இறக்குமதி பால் மா மீதான வரியை உடனடியாக குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில், இந்த விலை உயர்வு, உள்ளூரில் தயாரிக்கப்படும் பால் மா விலையையும் மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது.

“அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, இறக்குமதி மற்றும் உள்ளூர் பால் மா விலைகளை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். இதிலே தவறினால், வருங்காலத்தில் பொதுமக்கள் மீது விழும் செலவு சுமை இன்னும் மோசமாகும்.” என அசேல சம்பத் மேலும் கூறினார்.

இந்நிலையில், மக்கள் சுருக்கமான வாழ்வியலை கடைபிடிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அரசாங்கம், இந்த அத்தியாவசிய உணவுப் பொருளின் விலையைக் கட்டுப்படுத்த, விரைந்து செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...