முகப்பு அரசியல் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

பகிரவும்
பகிரவும்

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் எதிரியின் டிரோன் (UAV) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் காயமடைந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் கிரிகோரொவ் தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முன்பாக உக்ரைனின் தேசிய அவசர சேவைகள் திணைக்களத்தின்மீதான ரஷ்ய தாக்குதலினால் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்குப் பின் தீப்பிடித்த கட்டிடங்களை அணைக்கும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படங்களை அவசர சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...