முகப்பு உலகம் சுவிஸில் தமிழர் ஒருவரால் சீட்டுப் பண மோசடி – பல லட்சங்களை இழந்த தமிழ் குடும்பங்கள்!
உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

சுவிஸில் தமிழர் ஒருவரால் சீட்டுப் பண மோசடி – பல லட்சங்களை இழந்த தமிழ் குடும்பங்கள்!

பகிரவும்
பகிரவும்

சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கிடையில், கடந்த சில மாதங்களாக சீட்டுப்பிடித்தல் என்ற பெயரில் பாரிய நிதி மோசடிகள் நடைபெற்று வருவதாக வெளிப்படுகின்றது.

சீட்டுப்பிடித்தல் என்பது, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பணம் கட்டும் ஒரு முறையாகத் தோன்றினாலும், இது தற்போது பல தமிழர்கள் நிதி, நிம்மதி, உயிர் ஆகியவற்றையே இழக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

சுவிஸில் வசிக்கும் தமிழர் ஒருவரிடம், நூற்றுக்கணக்கான நபர்கள் சீட்டுப்பிடித்து, பல லட்சம் சுவிஸ் பிராங்குகளை இழந்துள்ளனர். இந்த நபர், ஆரம்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், பெரும் தொகை கையில் சேர்ந்தவுடன் காணாமல் போனுள்ளார்.
ஏமாற்றப்பட்டவர்கள் இப்போது செய்வதறியாத நிலையில், மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

சீட்டுப்பிடித்தல் முறைகள் பல்வேறு வெளிநாடுகளில் சட்டரீதியாக செல்லுபடியாகாத வகையில் அமைந்திருப்பதால், இந்த மோசடியில் சிக்கியவர்கள், சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். சிலர், தனிப்பட்ட முறையில் மனவேதனை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன என்பது துயரமான உண்மை.

மோசடி மட்டும் சுவிஸில் மட்டுமல்ல இந்த வகை மோசடிகள் தற்போது பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, யேர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளிலும் பரவலாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளன.சில இடங்களில், ஏமாற்றுபவர்களுக்கு எதிராக தாக்குதல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மூன்று வருடமாவது நெருக்கமாக பழகிய ஒருவரே, “நம்பிக்கை” என்ற பெயரில் நம்மை இந்தச் சீட்டுக்குழிக்குள் இழுக்கின்றனர். முடிவில், கட்டி வைத்த பணம் முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டு அந்த நபர் இடம் மாறிவிடுகிறார்.

இந்த வகைச் சீட்டுப் பண மோசடிகள் குறித்து தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். சட்டமுறை பாதுகாப்பின்றி, நம்பிக்கையைத் துனை வைத்து பணம் கொடுப்பது என்பது, ஒரு சமூக அழிவை உருவாக்கும் செயலாகவே திகழ்கிறது.

மூலம்: சுவிஸ்தமிழ்24

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உடைந்து வீழ்ந்தது வட்டுவாகல் பாலம். மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

முல்லைத்தீவு நகரில் நுழைவுப் பாதையாக செயல்பட்டு வந்த வட்டுவாகல் பாலம் இன்றைய தினம் (ஜூலை 15)...

ஆடி மாதத்தில் வலுப்பெறும் இலங்கை சுற்றுலா துறை!

இலங்கைக்கான சுற்றுலா அபிவிருத்தி ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம்...

உக்ரைனிய போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் புதிய திட்டம் — 50 நாட்களில் அமைதி ஏற்படாவிட்டால் ரஷ்யாவுக்கு 100% வரி!

CNN-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் நடக்கும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவிற்கு அழுத்தம்...

வாழ்க்கையை உல்லாசப்பயணமாக மாற்றிய இருவர் – குழந்தை மரணம்-இறுதியில் சிறைக்கு வழி!

லண்டன் | ஜூலை 14:கொன்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன் ஆகியோர், “மிகவும் கவனக்குறைவான காரணத்தால்...