முகப்பு அரசியல் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்! பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியது?
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்! பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியது?

பகிரவும்
பகிரவும்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது. இப்போது இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது வெளிநாட்டு பயணங்களைத் தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக புறப்பட முடியாத என்கிற கட்டளைச் சுற்றறிக்கை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசாத் மௌலானா வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் பிள்ளையான் ஹபரணை பகுதியில் தங்குமாறு சுரேஸ் சாலே ஏற்பாடு செய்ததாகவும் அதனை சாலே நேரடியாக கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எனது பணியிடத்திலும் மாற்றம் வரக்கூடும். சம்பளமும் ஒரே தொகையாக வழங்கப்படாமல் இருக்கலாம்” என சாலே கூறியதாகவும் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் முன்னாள் நல்லாட்சி ஆட்சியில் பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியதையும் அந்தக் குழு துணை ஆயுதக்குழுவாக செயல்பட்டதையும் அசாத் மௌலானாவின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...