முகப்பு இலங்கை யாழ் மூளாயில் குழு மோதல் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை – கல்வீச்சு, துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மூளாயில் குழு மோதல் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை – கல்வீச்சு, துப்பாக்கிப் பிரயோகம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட குழு மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 (ஜூலை 19) இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, இன்று இரு பிரிவுகளாக சேர்ந்த குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது. மோதலின் போது ஒரு மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மேலும் மற்றொன்று கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அதிதுரிதமாகச் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது, அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

N

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...