முகப்பு இலங்கை யாழ் மூளாயில் குழு மோதல் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை – கல்வீச்சு, துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மூளாயில் குழு மோதல் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் தீக்கிரை – கல்வீச்சு, துப்பாக்கிப் பிரயோகம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட குழு மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 (ஜூலை 19) இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, இன்று இரு பிரிவுகளாக சேர்ந்த குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது. மோதலின் போது ஒரு மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மேலும் மற்றொன்று கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அதிதுரிதமாகச் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது, அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

N

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...