முகப்பு அரசியல் பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள காசா!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள காசா!

பகிரவும்
பகிரவும்

ஐ.நா. ஆதரவு பெற்ற உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் எச்சரிக்கையின்படி, காசாவில் பஞ்சத்தின் “தீவிர சூழ்நிலை”உருவாகி வருகிறது. இது உணவுத்தட்டுப்பாடு என்னும் நிலையை மீறி, உயிர் பிரிகின்ற அளவிற்கு கடுமையாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் இணைந்து “மத்திய கிழக்கு பிரச்சனைகளை சீர்செய்ய” பணியாற்றுவதாக அறிவித்தார். மேலும் காசாவில் “உணவுப் பரிவர்த்தனை மையங்களை” அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இதுகுறித்த திட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் முன்னணி இரண்டு மனித உரிமை அமைப்புகள் “காசா மக்கள் மீது இஸ்ரேல் இன அழிப்பு நடத்தியிருக்கிறது” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதற்கு பதிலளித்த இஸ்ரேல் அரசு பேச்சாளர் ஒருவர், “எங்கள் நாட்டில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்” எனக் கூறினார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது அவரது சொந்த மனித உரிமை அமைப்புகளே இன அழிப்பு என்று குற்றம் சாட்டும் அளவுக்கு போய் விட்டது. இது ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண் மூடிக்கொள்ளக் கூடிய விஷயம் அல்ல.

Cource:-CNN

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...