முகப்பு அரசியல் பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள காசா!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள காசா!

பகிரவும்
பகிரவும்

ஐ.நா. ஆதரவு பெற்ற உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் எச்சரிக்கையின்படி, காசாவில் பஞ்சத்தின் “தீவிர சூழ்நிலை”உருவாகி வருகிறது. இது உணவுத்தட்டுப்பாடு என்னும் நிலையை மீறி, உயிர் பிரிகின்ற அளவிற்கு கடுமையாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் இணைந்து “மத்திய கிழக்கு பிரச்சனைகளை சீர்செய்ய” பணியாற்றுவதாக அறிவித்தார். மேலும் காசாவில் “உணவுப் பரிவர்த்தனை மையங்களை” அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இதுகுறித்த திட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் முன்னணி இரண்டு மனித உரிமை அமைப்புகள் “காசா மக்கள் மீது இஸ்ரேல் இன அழிப்பு நடத்தியிருக்கிறது” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதற்கு பதிலளித்த இஸ்ரேல் அரசு பேச்சாளர் ஒருவர், “எங்கள் நாட்டில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்” எனக் கூறினார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது அவரது சொந்த மனித உரிமை அமைப்புகளே இன அழிப்பு என்று குற்றம் சாட்டும் அளவுக்கு போய் விட்டது. இது ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண் மூடிக்கொள்ளக் கூடிய விஷயம் அல்ல.

Cource:-CNN

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...