முகப்பு அரசியல் மிடிகம சஹான் விமான நிலையத்தில் கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

மிடிகம சஹான் விமான நிலையத்தில் கைது!

பகிரவும்
பகிரவும்

குற்றவாளிக் குழுவைச் சேர்ந்த ஹிக்கடுவ லியனகே சஹான் அனைவராலும் “மிடிகம சஹன்” என அறியப்படும் சந்தேகநபர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வருகைப் பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான இவர் வேலிகம பகுதியைச் சேர்ந்தவர். இவர் மாத்தறை மற்றும் பாணந்துறை காவல் பிரிவுகளுக்குட்பட்ட பல கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாதாள உலக குழுத் தலைவரான ஹராக் கடா என அறியப்படும் “நதுன் சிந்தக விக்ரமரத்ன உடனும், மேலும் ஒரு பாதாளக்குழு உறுப்பினரான மிடிகம சுட்டி உடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து புறப்பட்டு வந்த IndiGo விமானம் 6E-1173 மூலம் இலங்கையை வந்தடைந்தார். முன்னே வழங்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் CID அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர்.

தற்போது சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...