முகப்பு அரசியல் எல்சல்வடாரில் அதிர்ச்சியூட்டும் அரசியலமைப்பு மாற்றம்!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

எல்சல்வடாரில் அதிர்ச்சியூட்டும் அரசியலமைப்பு மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

2019ம் ஆண்டு முதல் எல் சல்வடார் நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றி வரும் நயிப் புக்கேலே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என அந்நாட்டு பாராளுமன்றம் சட்டத் திருத்தம் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.

முந்தைய அரசியலமைப்பின் படி, ஓர் ஆளும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் உடனடியாக மீண்டும் போட்டியிட முடியாது எனக் கண்டறியப்பட்ட நிலையில், தற்போதைய திருத்தத்தின் மூலம் பதவிக்கால எல்லைகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு, முன்பைப் போன்று இரண்டாம் சுற்று தேர்தல் (run-off vote) முறையும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே சுற்றில் வெற்றி பெற்ற வேட்பளர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

இந்த தீர்மானம் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக ஆதரவு குழுக்கள் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளன.
ARENA கட்சியின் முக்கிய உறுப்பினர் மார்செலா வில்லட்டோரோ, “இந்தத் திருத்தம் மூலம் எல்சல்வடாரில் ஜனநாயகம் மரணமடைந்துவிட்டது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த மாற்றம் புக்கேலேவுக்கு அவரது அதிகாரத்தை காலமின்றி நீட்டிக்க வழிவகுக்கும் எனவும், இது வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் ஹூகோ சாவேஸ் மாதிரி ஆட்சிக்குத் திரும்பும் அபாயம் ஏற்படுத்தும் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

நயிப் புக்கேலே 2019ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். 2021ல் அரசியல் அமைப்புச் சபையின் கட்டுப்பாடுகளை மாற்றி, நீதித்துறை நியமனங்கள் மற்றும் பராமரிப்புகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியமை சுட்டிக்காட்டிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள திருத்தம் அவரது ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க கூடிய வழியாகவே கருதப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...