முகப்பு இலங்கை “கிளப் வசந்த” கொலை வழக்கில் சந்தேக நபர் “லோக்கு பட்டி” ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில்
இலங்கைசெய்திசெய்திகள்

“கிளப் வசந்த” கொலை வழக்கில் சந்தேக நபர் “லோக்கு பட்டி” ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில்

பகிரவும்
பகிரவும்

ஆகஸ்ட் 2

பிரபல தொழிலதிபர் “கிளப் வசந்த” கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவரான “லொ(க்)கு பட்டி” என அறியப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா, நேற்று நுகேகொடா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

90 நாள் தடுப்புக் காவல் முடிவதற்குமுன், அவருக்கு பல்வேறு கும்பல்களிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதியே முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 மே 4ஆம் தேதி பெலருசிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட “லோகு பட்டி”யிடம் தென்மேற்கு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணையின் போது, அவரிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் சொத்துகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம், சந்தேகநபரைக் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...