முகப்பு இலங்கை வவுனியாவில் கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வவுனியாவில் கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!

பகிரவும்
பகிரவும்

வவுனியா நகரில் உள்ள VSC தனியார் கல்வி நிலைய வளாகக் கிணற்றிலிருந்து, ஒரு உயர்தர வகுப்பு மாணவி இன்று (11) காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்தவர் வவுனியா கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவலைப் பெற்ற வவுனியா காவல்துறையினர், சடலத்தை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, நீதிமருத்துவப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த துயரச் சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...