முகப்பு இலங்கை யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகன விபத்து-மோட்டார் சைக்கிளில் ஏறிய டிப்பர் வாகனம்.
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகன விபத்து-மோட்டார் சைக்கிளில் ஏறிய டிப்பர் வாகனம்.

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் ஹோண்டாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் மோட்டார் சைக்கிளின் மீது ஏறி மிதித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்ததாக இருப்பதோடு, இவ்வீதிகளில் டிப்பர் வாகனங்கள் அதிகமாகச் செல்வது வழக்கமாகி விட்டது. இதனால், மக்களின் உயிர் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி வருவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமான நேரங்களிலும், குறுகிய வீதிகளிலும் டிப்பர் வாகனங்கள் செல்லும் நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்ளூர் மக்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகள் மற்றும் நேரங்களில் டிப்பர் வாகனங்கள் செல்லாதவாறு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...