முகப்பு இலங்கை யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

பகிரவும்
பகிரவும்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் விசேட விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் இணைந்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடுமுறை கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் உடனடியாக அமைச்சின் செயலாளருக்கு விடுமுறை அறிவிக்க பணித்துள்ளார்.

ஆனால், தற்போது வடக்கு கல்வித் திணைக்களங்கள் விடுமுறை கேட்டுக்கொண்ட பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி விடுமுறை அறிவிக்க வலியுறுத்துவதாக எம்.பி. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...