முகப்பு சமூகம் சமூக ஊடக தாக்கம்: இளைஞர்களில் வன்முறை சிந்தனை அதிகரிப்பு – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!
சமூகம்செய்திசெய்திகள்

சமூக ஊடக தாக்கம்: இளைஞர்களில் வன்முறை சிந்தனை அதிகரிப்பு – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

பகிரவும்
பகிரவும்

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் அதிகரித்து வரும் வன்முறைக் குணங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என காராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் சிறப்பு உளவியல் நிபுணர் வைத்தியகலாநிதி ரூமி ரூபென் எச்சரித்ததார்.

“இன்றைய சமூகத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறை ஒரு கருவியாக மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் வெறுப்பும் தாக்குதல்களும் பரவுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. வரலாற்றில் கருத்தியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்கள் இன்று இளைஞர்களை வன்முறைக்குள் இழுக்கும் சூழலை உருவாக்கியுள்ளன” என்றார்.

டாக்டர் ரூபென் மேலும் எச்சரித்ததாவது இத்தகைய தாக்கங்களுக்கு ஆளாகும் இளைஞர்கள் அடிநிலைக் குழுக்கள், போதைப்பொருள் பழக்கம், ஆயுதக் கும்பல்கள் ஆகியவற்றில் ஈடுபடக் கூடும். அத்துடன் அவர்கள் கோபக் கட்டுப்பாட்டு சிக்கல்களிலும் சிக்கிக்கொள்வர். ஒருமுறை இத்தகைய துணைக் கலாச்சாரத்தில் இணைந்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த கலாச்சாரத்தை மாற்ற ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, தேவையான மீளுருவாக்கம் வழங்குவதே பிரச்சினையை குறைக்கும் சிறந்த வழியாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...