மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன.
இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிரதியமைச்சர்கள் சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம. ஜெகதீஸ்வரன், க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. ரஜீவன், மேலும் பல திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தை பதிவிட