முகப்பு இலங்கை முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் திடீரென இடைமறித்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை நடத்திய பின்னர் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் கார் சாரதியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால் நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கூறினாலும், பிணை எடுப்பதைத் தடுக்கவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் சந்தேகித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்துக்குள் முல்லைத்தீவு போலீசார் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...