முகப்பு இலங்கை முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் திடீரென இடைமறித்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை நடத்திய பின்னர் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் கார் சாரதியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால் நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கூறினாலும், பிணை எடுப்பதைத் தடுக்கவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் சந்தேகித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்துக்குள் முல்லைத்தீவு போலீசார் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த...

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...

BYD மின்சார வாகனங்கள் 506 ஐ விடுவிக்க சுங்கத்தினர் சம்மதம்!

கொழும்பு – இலங்கை சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD மின்சார வாகனங்கள் 506 ஐ கூடுதல்...

நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!

புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக்...