முகப்பு இலங்கை நாடளாவிய போலீஸ் விசேட நடவடிக்கையில் 3,709 பேர் கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நாடளாவிய போலீஸ் விசேட நடவடிக்கையில் 3,709 பேர் கைது!

பகிரவும்
பகிரவும்

இலங்கை போலீசின் மா அதிபரின் உத்தரவின் கீழ் நாடளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கை நேற்று (12) தினம் முழுவதும் இடம்பெற்றது.

போலீஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி, இந்நடவடிக்கையில் மொத்தம் 3,709 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியமைக்காக 33 பேர், நாடளாவிய குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 17 பேர், மேலும் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைகளின் பேரில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய போலீஸ் நிலையங்களின் பொறுப்பில் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 26,985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...