முகப்பு இலங்கை மன்னாரில் பதற்ற நிலை : காற்றாலை கோபுர பொருட்களை எதிர்த்து மக்கள் போராட்டம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மன்னாரில் பதற்ற நிலை : காற்றாலை கோபுர பொருட்களை எதிர்த்து மக்கள் போராட்டம்!

பகிரவும்
பகிரவும்

மன்னார் பகுதியில் இன்று (27) சற்று முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் கலகம் அடக்கும் படையினரின் பாதுகாப்புடன், காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மன்னார் நகரை நோக்கி பாரிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் ஒன்று கூடி, மன்னார் நுழைவு பகுதியில் உற்சாகமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

மக்களின் விருப்பம், எதிர்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை புறக்கணிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் காற்றாலை கோபுர பொருட்கள் கொண்டு செல்லப்படுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான செயல்.

மின்சார உற்பத்தி தேவையெனில் அது மக்கள் பங்கேற்புடன், உரையாடல் மூலம், சமரச மனப்பாங்குடன் நடைபெற வேண்டும். ஆனால், காவல் துறையினரின் சக்தியை பயன்படுத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மக்களிடையே அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையை உருவாக்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்கள் எழுப்பும் குரல் அடக்கப்படாமல், கேட்டறியப்பட வேண்டியது தான் நல்லாட்சி.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...