முகப்பு இலங்கை இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு ஓட்டல் திட்டம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு ஓட்டல் திட்டம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

பகிரவும்
பகிரவும்

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள், இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஓட்டல் திட்டமான “கிராண்ட் சேரண்டிப் கொழும்பு” திறப்பு விழாவில் நேற்று (10) இரவு ஷாங்க்ரிலா ஓட்டலில் கலந்து கொண்டார்.

இத்திறப்பு விழைவு, திட்டத்தை முன்னெடுத்த ABEC நிறுவனம் தனது 20ஆவது ஆண்டு நிறைவையும் ஒரே நேரத்தில் கொண்டாடிய சிறப்புநிகழ்வாக அமைந்தது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்சியாளர் சனத் ஜெயசூரியாவும், ABEC நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திலிப் கே. ஹேரத் அவர்களும் அமைச்சருடன் இணைந்து திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் தெரிவித்ததாவது:

“இத்திட்டம் இலங்கைக்கான ஒரு முக்கிய முதலீடாகும். இது எமது சுற்றுலாத்துறையின் வளர்ந்து வரும் திறனை வெளிப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைத்ததன் மூலம், நாட்டின் சுயநுட்ப ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைகள் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லப்படும்.”

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா, பல்கலைக்கழக பேராசிரியர்கள், தூதர்கள் உள்ளூர் – வெளிநாட்டு கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இது இலங்கையின் சுற்றுலாத்துறை புதுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் குறிப்பிடப்பட்டது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...

பேக்கோ சமனின் மனைவி சஜிகா லக்ஷானியின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பேக்கோ சமன் என அழைக்கப்படும் நபரின் மனைவி சஜிகா லக்க்ஷானி பத்தினி மற்றும் அவளுடன் நெருக்கம்...