முகப்பு இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கூரையில் ரி-56 துப்பாக்கி!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கூரையில் ரி-56 துப்பாக்கி!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கட்டிடத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழு வளாகமும் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் விரிவாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று (30) நூலகத்தின் கூரையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு மெகசின்களும் சில வயர்களும் முதலில் தொழிலாளர்களால் கண்டறியப்பட்டன. இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.

பின்னர், காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று அவை அகற்றப்பட்டன. ஆனால், இன்று (31) காலை தொடர்ந்த திருத்தப் பணிகளின் போதும் அதே பகுதியில் ரி-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் மற்றும் சில மருத்துவப் பொருட்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உறுதிப்படுத்தி, தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...