முகப்பு உலகம் இந்தியாவில் அரிய டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
உலகம்கல்விசெய்திசெய்திகள்

இந்தியாவில் அரிய டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

பகிரவும்
பகிரவும்

சஹரன்பூர் – உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சஹன்சரா ஆற்றங்கரையில் மூன்று கொம்புகளைக் கொண்ட டைனோசர் இனமான டிரைசெராடாப்ஸ் (Triceratops) என நம்பப்படும் ஒரு எலும்புக்கூடு (fossil) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, விஞ்ஞானிகள் டிரைசெராடாப்ஸின் மூக்கு பகுதியில் அமைந்த கொம்பாக இருக்கக்கூடிய ஒரு எலும்புக்கூடு கண்டறிந்துள்ளனர்.

இதுவே டிரைசெராடாப்ஸ் என்பதைக் குறிப்பிட முடியாவிட்டாலும், உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட டிரைசெராடாப்ஸ் எலும்புக்கூடுகளுடன் இது மிகுந்த ஒற்றுமையைக் கொண்டுள்ளது. அதன் வடிவம், அமைப்பு, அளவு அனைத்தும் அதற்கு மிக நெருக்கமாக உள்ளது,” என்று அங்குள்ள இயற்கை வரலாறு மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் மொஹமத் உமர் சயீப் கூறினார்.

இவ்வகை டைனோசர்கள் பொதுவாக கடந்த கிரெடேசியஸ் காலம் (Late Cretaceous period) எனப்படும் 100.5 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எலும்புக்கூடு மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இது மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் இது முழுமையாக மணற்பாறையாக மாறியுள்ளது. இது இமயமலையின் அடிவாரப் பகுதியில் சுமார் 3.5 முதல் 4 கோடி ஆண்டுகள் புதைந்திருந்ததால் கனிமச்சேர்க்கை மூலம் மாற்றம் அடைந்தது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு,” என்று சயீப் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இது பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...