முகப்பு இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
இலங்கைகல்விசமூகம்செய்திசெய்திகள்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பகிரவும்
பகிரவும்

அரசாங்கம் தேர்தலுக்கு முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வாக்குகளைப் பெற பல வாக்குறுதிகள் வழங்கியிருந்தும், தற்பொழுது அவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைக்காமல் புறக்கணித்துவிட்டதாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சங்க செயலாளர் விராஜ் மனரங்க ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் “அதிகாரிகள் மறியல் அல்லது போராட்டங்களில் ஈடுபடாமல் வீட்டிற்கு திரும்பி தங்களது பிள்ளைகளது படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“எந்த தீர்வும் வழங்காமல் எங்களை வீடு செல்லச் சொல்வது பொருத்தமல்ல. நாங்கள் ஆசிரியர்களின் பொறுப்புகளைச் செய்தோம். ஆனால் ஆசிரியர் பதவிக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக எங்கள் சேவை அங்கீகரிக்கப்படாது என்பதை அறிந்தபடியே, போதுமான இழப்பீடு இன்றி குழந்தைகளுக்கு கற்பித்தோம்,” என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது “கோவிட்-19 காலத்தில் நாங்கள் முழுத் திறனோடு பணியாற்றினோம். அப்போது அரசு எங்களை பாராட்டியது. ஆனால் இப்போது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தேவையில்லை எனக் கூறுகிறது. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பள்ளிகள் செயல்பட நாங்களையே அழைத்தார்கள். நாம் இணங்கவில்லை என்றால் எங்கள் பணியை நிரந்தரப்படுத்த முடியாது என அரசாங்கம் எச்சரித்தும் இருந்தது.”

மேலும், அவர்களின் பதவியை ஆசிரியர் சேவையாக நிரந்தரப்படுத்துவதாக அரசு முன்பு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசின் முந்தைய உறுதிமொழிகளை வெளிப்படுத்தும் ஒரு காணொளியையும் செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த பிரச்சினையில் பொது விவாதத்துக்குத் தயாராக இருக்குமாறு கல்வி அமைச்சருக்கும், தொழிலாளர் துணை அமைச்சரான மஹிந்த ஜயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சிக்கும் சங்கம் திறந்த சவால் விடுத்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு குழு ஜனாதிபதி செயலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தேர்தல் முன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...