யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த அரச பேருந்தின் சாரதி அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தினால், பேருந்தில் பயணித்தவர்கள் நடுவீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும், புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று(7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருத்தை பதிவிட