முகப்பு இலங்கை இளைஞர்களுக்கிடையிலான சண்டை கொலையில் முடிந்தது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

இளைஞர்களுக்கிடையிலான சண்டை கொலையில் முடிந்தது!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்திலே முள்ளியவளைபகுதியில் முறிப்பு என்னும் கிராமத்தில் இன்று ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியான சண்டையின் விளைவாக ஏற்பட்டது எனக் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில், இரண்டு முஸ்லிம் இளைஞர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு முஸ்லிம் இளைஞருக்கு ஆதரவாக ஒரு தமிழ் இளைஞரும் கலந்து கொண்டுள்ளார். பின்னர், அந்த முஸ்லிம் இளைஞர் தப்பி ஓடியுள்ளார், ஆனால் தமிழ் இளைஞர் அவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

அவரை கட்டிவைத்து, கைக்கத்தியால் (காட்டுக்கத்தி) கைகளில் எட்டு முறை குத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர் மயக்கம் அடைந்த நிலையில், கைக்கத்தியால் அவரது தலையில் பாரிய வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு, அந்த இளைஞரை தூக்கிக் கொண்டு வந்து வீதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் அடைந்த நிலையில், அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கே அவர் மரணம் அடைந்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

இறந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...