முகப்பு இலங்கை இளைஞர்களுக்கிடையிலான சண்டை கொலையில் முடிந்தது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

இளைஞர்களுக்கிடையிலான சண்டை கொலையில் முடிந்தது!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்திலே முள்ளியவளைபகுதியில் முறிப்பு என்னும் கிராமத்தில் இன்று ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியான சண்டையின் விளைவாக ஏற்பட்டது எனக் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில், இரண்டு முஸ்லிம் இளைஞர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு முஸ்லிம் இளைஞருக்கு ஆதரவாக ஒரு தமிழ் இளைஞரும் கலந்து கொண்டுள்ளார். பின்னர், அந்த முஸ்லிம் இளைஞர் தப்பி ஓடியுள்ளார், ஆனால் தமிழ் இளைஞர் அவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

அவரை கட்டிவைத்து, கைக்கத்தியால் (காட்டுக்கத்தி) கைகளில் எட்டு முறை குத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர் மயக்கம் அடைந்த நிலையில், கைக்கத்தியால் அவரது தலையில் பாரிய வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு, அந்த இளைஞரை தூக்கிக் கொண்டு வந்து வீதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் அடைந்த நிலையில், அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கே அவர் மரணம் அடைந்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

இறந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...