முகப்பு இலங்கை பாதாளக்குழுக்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க
இலங்கைசெய்திசெய்திகள்

பாதாளக்குழுக்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க

பகிரவும்
பகிரவும்

நாட்டில் உள்ள பாதாளக்குழுக்களை முற்றுமுழுதாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

10வது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சு ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரச அதிகாரப்பூர்வ அமைப்புகள் செயற்பட்டாலும், சில அதிகாரப்பூர்வ நிலையங்களுக்குள் கூட பாதாளக் குழுக்களின் தாக்கம் காணப்படுவதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்ற வளாக பாதுகாப்பு மேம்படுத்தப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார

இந்த சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார கலந்து கொண்டு நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும், நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கண்காணித்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...