முகப்பு இலங்கை பாதாளக்குழுக்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க
இலங்கைசெய்திசெய்திகள்

பாதாளக்குழுக்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை – ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க

பகிரவும்
பகிரவும்

நாட்டில் உள்ள பாதாளக்குழுக்களை முற்றுமுழுதாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

10வது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சு ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரச அதிகாரப்பூர்வ அமைப்புகள் செயற்பட்டாலும், சில அதிகாரப்பூர்வ நிலையங்களுக்குள் கூட பாதாளக் குழுக்களின் தாக்கம் காணப்படுவதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்ற வளாக பாதுகாப்பு மேம்படுத்தப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார

இந்த சந்திப்பில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார கலந்து கொண்டு நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும், நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கண்காணித்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!

லீஸ்டர்ஷையர் – இங்கிலாந்துபிராங்கிளின் பூங்கா பகுதியில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...