முகப்பு இலங்கை மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!
இலங்கைசெய்திசெய்திகள்

மிட்வெணிய துப்பாக்கிச் சூடு: மூவர் கொலை – முன்னாள் இராணுவ வீரர்கள் கைது!

பகிரவும்
பகிரவும்

2025.02.18 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய மிட்வெணிய மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2025.02.21 அன்று மிட்வெணிய பொலிஸ் பிரிவு, வெவபாக்கட, வீரகெட்டிய பொலிஸார் மற்றும் தங்கல்ல குற்றப்பிரிவு பொலிஸ் குழுவின் ஒத்துழைப்புடன், இந்த சந்தேக நபரை மிட்வெணிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடைய இருவராகும். இவர்கள் வெவபாக்கட மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதோடு, தற்போது இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்களாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிட்வெணிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...