முகப்பு இலங்கை யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – நண்பர் கடுமையாக காயம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – நண்பர் கடுமையாக காயம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், கந்தர்மட சந்திக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் யாழ் மாவட்ட செயலர் ம. பிரதீபனின் மகன் மற்றும் அவரது நண்பர் காயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம் வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதன் விளைவாக, அருகிலிருந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில், வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலரின் மகன் ஆதி சிறுபாடுகளுக்கு உள்ளாகினார். ஆனால், அவருடன் பயணித்த அவரது நண்பர் கடுமையான காயமடைந்ததுடன், அவரது கால்கள் வாகனத்திற்குள் சிக்குண்டதால், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடிய பின்னரே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனம் மாவட்ட செயலரின் வாகனம் என்பதோடு, அந்த நேரத்தில் அவர் இல்லாமல், அவரின் மகனே அதை செலுத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு -1

விபத்துக்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் சொந்த வாகனம் என்றும் உத்தியோகபூர்ப அரச வாகனம் இல்லை என்றும் உறுதிப்பதுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...