முகப்பு அரசியல் முன்னாள் பிரதமருடன் ஒப்பிடும்போது தற்போதைய செலவுத் திட்டம் 44% குறைப்பு – அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார
அரசியல்இலங்கைகட்டுரைகள்செய்திசெய்திகள்

முன்னாள் பிரதமருடன் ஒப்பிடும்போது தற்போதைய செலவுத் திட்டம் 44% குறைப்பு – அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார

பகிரவும்
பகிரவும்

முன்னாள் பிரதமரின் செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய பிரதமரின் செலவுகள் ரூபா 630 மில்லியனிலிருந்து ரூபா 350 மில்லியனாக, அதாவது 44% குறைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதமருக்காக முன்னதாக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனம் அரசிற்கு திருப்பி அளிக்கப்பட்டதால், அதற்கான காப்புறுதி செலவு ரூ. 37.61 மில்லியனும், பராமரிப்பு செலவு ரூ. 16.15 மில்லியனும், மொத்தம் ரூ. 53.76 மில்லியன் மிச்சமாகியுள்ளது.

மேலும், பிரதமரின் தனிப்பட்ட பணியாளர்கள் 47ல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டதன் மூலம் மாத சம்பள மற்றும் கொடுப்பனவாக ரூ. 22 மில்லியன் செலவுகளை குறைக்க முடிந்துள்ளது. இதேபோல், பிரதமர் அலுவலகத்திற்கான எரிபொருள் செலவு ரூ. 3.24 மில்லியனிலிருந்து ரூ. 0.33 மில்லியனாக குறைக்கப்பட்டதால், மொத்தமாக லட்சம் 3.3 ரூபாய் மிச்சமாகியுள்ளது.

அதே நேரத்தில், பிரதமர் அலுவலகத்தில் இயங்கிய மருத்துவப் பிரிவு மூடப்பட்டதன் மூலம் மாதம் ரூ. 4 மில்லியன் செலவுகளை குறைக்க முடிந்துள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளாலும், மக்களின் வரிப்பணத்திலிருந்து முன்பு செலவாகிய தொகையின் பாதியை விட அதிகமான செலவுகளை குறைக்க முடிந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார். அவர் இந்த தகவலை 2025 நிதி திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் செலவுத் திட்டங்களை விளக்கும்போது தெரிவித்தார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!

குழந்தை என்னும் பாதுகாப்பற்ற வயதிலே, 14 வயது பள்ளி மாணவியொருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து...

🏆 2025ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்து அழகு ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வெற்றிகொண்டு பெற்றுள்ளார்!

ஹைதராபாத், இந்தியா – மே 31, 2025 72வது உலக அழகி போட்டி, இந்தியாவின் தெலுங்கானா...

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள...

லாஃப்ஸ் எரிவாயுவின் ஜூன் மாதத்திற்கான விலை நிர்ணயம் வெளியானது. 

  லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், 2025 ஜூன் மாதத்திற்காக வீட்டு...