முகப்பு உலகம் சீனாவின் டென்சென்ட் புதிய அதிவேக AI மொடலை வெளியிட்டது!
உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

சீனாவின் டென்சென்ட் புதிய அதிவேக AI மொடலை வெளியிட்டது!

பகிரவும்
பகிரவும்

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் டென்சென்ட் (Tencent) (0700.HK), உலகளவில் பிரபலமடைந்த DeepSeek R1-ஐ விட வேகமாக பதிலளிக்கும் Hunyuan Turbo S என்ற புதிய அதிதிறன்செயற்கை நுண்ணறிவு (AI) மொடலை வியாழக்கிழமை வெளியிட்டது. DeepSeek நிறுவனத்தின் உள்ளூர் மற்றும் சர்வதேச வெற்றிகள், சீனாவின் பெரிய AI நிறுவனங்களை போட்டியில் முன்னோக்கி செல்லக் கட்டாயமாக்கியுள்ளன.

Turbo S மொடல் ஒரு விநாடிக்குள் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியது. இது DeepSeek R1, Hunyuan T1 போன்ற மெதுவான சிந்தனை மொடல்களுக்குப் பதிலாக, விரைவாக செயல்படும் திறனைக் கொண்டதாக டென்சென்ட் கூறியுள்ளது.

மேலும், Turbo S-இன் திறன்கள் அறிவியல், கணிதம் மற்றும் தர்க்கம் போன்ற துறைகளில் DeepSeek-V3-க்கு நிகரானதாக இருப்பதாக டென்சென்ட் தெரிவித்துள்ளது. DeepSeek-V3-யை இயக்கும் DeepSeek AI மென்பொருள், OpenAI-யின் ChatGPT-யை விட அதிகமாக அப்பிளிகேஷன் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

DeepSeek நிறுவனம் இதுகுறித்த கருத்துக்கணிப்புக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. கடந்த மாதம் DeepSeek-R1 உலக AI தொழில்நுட்பத்தை அதிர்ச்சியடையச் செய்தது. இதன் தாக்கமாக சீனாவுக்கு வெளியே AI பங்குகள் வீழ்ச்சியடையக்காரணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, Alibaba (9988.HK) நிறுவனம் Qwen 2.5-Max என்ற AI மொடலை வெளியிட்டது. இது DeepSeek-V3-ஐ விட திறமையாக செயல்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும், Turbo S-இன் பயன்பாட்டு செலவுகள் அதன் முந்தைய மொடல்களை விட பலமடங்கு குறைந்துள்ளதாக டென்சென்ட் கூறியுள்ளது. DeepSeek நிறுவனத்தின் திறந்த மூல (open-source) AI மற்றும் குறைந்த விலை விதிகள், சீனாவின் முன்னணி AI நிறுவனங்களுக்கும் கட்டாயமாக பயன்பாட்டு செலவுகளை குறைக்க தூண்டிவிட்டுள்ளது. அசுர வளர்ச்சியை காட்டி வரும் சீனாவின் AI தொழில்நுட்பம் இலங்கை போன்ற எமது நாடுகளுக்கு பயனுடையதாக அமையுமா?

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க ஜாமீனில் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசு நிதியில் இருந்து சுமார் ரூ. 16.6 மில்லியன் தொகை...

ரணில் விக்கிரமசிங்க வழக்கு- Zoom மூலம் தொடங்கிய விசாரணை!

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நிலுபுலி லங்கபுர முன்னிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புடைய வழக்கின்...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...