முகப்பு இலங்கை தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!
இலங்கைசெய்திசெய்திகள்

தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!

பகிரவும்
பகிரவும்

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றிய தமிழினி சதீஷ், கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தீயில் கருகி உயிரிழந்தார். முதல்படியாக இது விபத்து என கருதப்பட்டாலும், தற்போது அவரது மரணம் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழினி, தற்செயலாக தீப்பற்றி உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அவரது மரணம் விபத்தாகவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவரது தகப்பனார் பீ. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது மகளின் மரணம் வழக்கமான விபத்தாக அல்ல, இது கொலைக்கேற்ப அமைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனவே, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...