முகப்பு இலங்கை தத்தெடுத்த குழந்தையின் கொலை!- கொழும்பு உயர்நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு,
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தத்தெடுத்த குழந்தையின் கொலை!- கொழும்பு உயர்நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு,

பகிரவும்
பகிரவும்

இலங்கையில் தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மொகமது அலி முகமது உஸ்மான் மற்றும் மொகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை, மார்ச் 6, 2025) மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா இந்த தீர்ப்பை வழங்கினார்.

தத்தெடுத்த குழந்தையின் கொலை தொடர்பான இந்த வழக்கு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை பிரதிபலிக்கிறது.

மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.

தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: பாடசாலைகளில் முறைப்பாடுகள் மூடி மறைக்கப்படக்கூடாது – ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண பாடசாலைகளில் குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடுகள் எழுகின்றன என்ற காரணத்தினால், அவை...

சீமெந்து விலை இன்று முதல் அதிகரிப்பு!

ஜூன் 8, 2025 – தமிழ்தீ இலங்கையில் இன்று (ஜூன் 8) முதல் 50 கிலோ...

சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக நமல் ராஜபக்ஷக் குற்றச்சாட்டு!

நாட்டில் சமீபத்தில் அதிகரித்த குற்றச்செயல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள SLPP பாராளுமன்ற...

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா தீவிரமான வான்வழி தாக்குதல்!

உலகத்தை உலுக்கியவாறு, ரஷ்யா கடந்த இரவிலிருந்து இன்று அதிகாலை வரை உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட...