முகப்பு இலங்கை மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!

பகிரவும்
பகிரவும்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவின் தேவபுரம் மைதானம் அருகே உள்ள காட்டு பகுதியில், குப்பையில் வீசப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டது.

பொலிஸ் தரப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில், இன்று காலை 9.00 மணியளவில், ஆண் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதை பொதுமக்கள் கண்டே பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், நீதிமன்ற உத்தரவுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்த குழந்தை இன்று பிறந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதனை உரைப்பையில் கட்டி கொண்டு வந்து குப்பையில் வீசி சென்ற தாயை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...