முகப்பு இலங்கை மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மட்டக்களப்பில் கொடூரம் – பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்ற தாய்!

பகிரவும்
பகிரவும்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவின் தேவபுரம் மைதானம் அருகே உள்ள காட்டு பகுதியில், குப்பையில் வீசப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டது.

பொலிஸ் தரப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில், இன்று காலை 9.00 மணியளவில், ஆண் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதை பொதுமக்கள் கண்டே பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், நீதிமன்ற உத்தரவுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்த குழந்தை இன்று பிறந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதனை உரைப்பையில் கட்டி கொண்டு வந்து குப்பையில் வீசி சென்ற தாயை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...