முகப்பு இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கல்!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கல்!

பகிரவும்
பகிரவும்

10,096 அரசு பாடசாலைகளுக்கு இவ்வாண்டு பாடசாலை சீருடை துணிகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 4,640,086 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12 மில்லியன் மீட்டர் நீளமான துணிகளை சீன மக்கள் குடியரசு உதவியாக வழங்கியுள்ளது.

தற்போது, அனைத்து பாடசாலைகளுக்கும் சீருடை துணிகள் விநியோகிக்கப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு பாடசாலைகளிலும், அரசாங்க அங்கீகரித்த பிரிவென்களிலும், சாதாரண மாணவர்களுக்கும் இலவசமாக பாடசாலை சீருடை துணிகளை வழங்கும் நடைமுறை 1992ஆம் ஆண்டிலிருந்து இடையீடின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2015 முதல் 2020 வரை மாணவர்கள் வௌச்சர்களைப் பெற்றுக் கொண்டு சீருடை துணிகளை பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு, மீண்டும் நேரடியாக துணிகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு தேவையான பள்ளி சீருடை துணிகளில் 70% பங்கினை சீனா வழங்கியது. 2024ஆம் ஆண்டில் இது 80% ஆக அதிகரித்தது.

இந்த ஆண்டு, 2025ஆம் ஆண்டுக்கான தேவைக்கு 100% சீருடை துணிகளை சீன மக்கள் குடியரசு இலவசமாக வழங்கியுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ. 5,171 மில்லியன் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...