முகப்பு இலங்கை வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?
இலங்கைசெய்திசெய்திகள்

வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?

பகிரவும்
பகிரவும்

நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

தகவலின்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் DASH நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, கடமையை முடித்து வீட்டிற்குத் திரும்பும் வழியில், பேருந்திலிருந்து இறங்கிய வேளையில், குறித்த இளைஞர் அவரை தடியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய இளைஞர் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இதே இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து இட்டு வருகின்றனர்!

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...