முகப்பு அரசியல் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது!

பகிரவும்
பகிரவும்

2023ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – வெலிகம – பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று (10) மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவருக்கு ஒருவர் ரூ.10 இலட்சம் என இரண்டு உறுதிமொழிகளுடன் பிணை வழங்கப்பட்டது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு பல வாரங்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கடந்த மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஏப்ரல் 3ஆம் திகதி வரையும் பின்னர் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கில் மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட்...