முகப்பு இலங்கை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து!

பகிரவும்
பகிரவும்

 இன்று (14) காலை அக்‌போபுராவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்பட மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்‌போபுராவிலிருந்து கந்தளாயை நோக்கி புறப்பட்ட பேருந்து, அதே திசையில் சென்ற டபுள்-கேப் வாகனத்தின் பின்பகுதியில் மோதி, பின்னர் எதிர்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இது அக்‌போபுரா பகுதியில் அமைந்துள்ள 85வது மைல் கல்லினருகே நடந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதியும், பயணிகளும் ( குழந்தைகள் உட்பட) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின், பேருந்து சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாவனெல்லவை சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்‌போபுரா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...