14 வயதில் ஐபிஎல்லை கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி – அறிமுக பந்திலேயே சிக்ஸர்!
ராஜஸ்தான் அணிக்காக இன்றைய போட்டியில் அறிமுகமான 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். லக்னோ அணிக்கெதிரான IPL தொடரின் 36வது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியில் இருந்து இவரது அறிமுகம் நடைப்பெற்றது.
காயம் காரணமாக கேப்டன் சஞ்சு சாம்சன் போட்டியில் கலந்து கொள்ளாத நிலையில், ரியான் பராக் கேப்டனாகப் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தனது வயதைக் காட்டிலும் பலம் மிக்க பவர்ஹிட்டராக வலம் வந்துள்ளார்.
லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 180 ரன்கள் குவித்தது. 181 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியபோது, ஆரம்ப ஜோடியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் களமிறங்கினர்.
லக்னோவின் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் களமிறங்கிய வைபவ், சிறிது விலகி கவர்ஸ் திசையில் சிக்ஸ் ஒன்றை உறுதியோடு அடித்தார். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனுடன் மட்டும் சமாதானமில்லை; அடுத்த ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தையும் சிக்ஸருக்கே அனுப்பிய வைபவ், தன்னை ஒரு வலிமைமிக்க பவர் ஹிட்டராக நிரூபித்துள்ளார்.
இந்த விளையாட்டின் மூலம், 14 வயதில் IPL பந்துக்கு சிக்ஸ் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. அவரது தைரியம், ஆட்டத்திறமை, மற்றும் துடிப்பான தொடக்கம், அவரை IPL ரசிகர்களின் மனதில் பதியவைத்துள்ளது.
கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...
மூலம்AdminOctober 16, 2025நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...
மூலம்AdminOctober 15, 2025இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...
மூலம்AdminOctober 14, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட