கடந்த நாட்களில் தீவின் பல பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுகள், மனிதக் கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சந்தேகநபர்கள் அவர்களது தலை மற்றும் முகங்களை மூடும் வகையில் தலைக்கவசங்களை அணிந்து குற்றங்கள் செய்துள்ளதாக கவனிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தலைக்கவசங்களை அணிதல் என்பது பொதுவாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போதேயே அவசியமானதாகும். இது எப்போதும் ஓட்டுநர் மற்றும் பின்னிலுள்ள பயணியின் பாதுகாப்பிற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பது வசியம்,
ஆனால் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அவர் மற்றும் அவரிடமுள்ள பொருட்கள் மற்றும் அவர் கொண்டிருக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் சோதனையிட வேண்டும் என்பது காவல் துறை தலைமை அலுவலகத்தினால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source: Police media
கருத்தை பதிவிட