சுவிட்சர்லாந்து – ஏப்ரல் 27, 2025: ஆர்காவ் கன்டோனல் போலீசார் தால்ஹெய்ம் மற்றும் ஸ்டாஃபெலெக் பாஸ் இடையிலுள்ள இரண்டாம் நிலை சாலையில் வேகக் கட்டுப்பாடு கண்காணிப்பை மேற்கொண்டனர். இங்கு மணிக்கு 80 கிமீ என்ற வேக வரம்பு விதிக்கப்பட்டிருந்த நிலையில், லேசர் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு இளம் ஓட்டுநர்கள் கடுமையான அதிவேக ஓட்டத்தில் சிக்கியுள்ளனர்.
முதல் சம்பவத்தில், 18 வயதுடைய சுவிஸ் இளைஞர் ஒருவர் தனது BMW காரை 161 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றதைக் போலீசார் பதிவு செய்தனர். சட்டபூர்வமான வேகத்தை விட 76 கிமீ அதிகமாக வாகனம் ஓட்டியிருந்தமைக்காக, சம்பவ இடத்திலேயே அவரது தற்காலிக ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது 300 ஹார்ஸ் பவருக்கு மேற்பட்ட BMW காரும் போலீசார் ஆய்வுக்காக கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பில் அரசு வழக்கறிஞரின் வழிகாட்டலின் கீழ் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில், மற்றொரு சம்பவமாக, 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் பயிற்சியாளர் ஒருவர் தனது KAWASAKI வாகனத்தை 150 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது, அங்குள்ள வேக வரம்பை 66 கிமீ அளவுக்கு மீறியதாகும். இதனால் அவரின் உரிமமும் இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளும் தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, மேலும் அவருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் கடுமையான சாலை பாதுகாப்புச் சட்டங்களின்படி, இத்தகைய அதிவேக ஓட்டங்கள் பொதுமக்களின் உயிருக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்துவதால், குற்றவியல் குற்றமாகவே கருதப்படுகின்றன. குறிப்பாக இளம் மற்றும் அனுபவமற்ற ஓட்டுநர்கள் தொடர்பான வழக்குகள் கடுமையாக எடுக்கப்படுகின்றன.
“பொறுப்பற்ற ஓட்டம் என்பது சாலைப் பயணிகள் அனைவரின் உயிருக்கும் ஆபத்தாக இருக்கக்கூடும். அதனைத் தடுக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்தும் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்வார்கள்,” என ஆர்காவ் போலீசார் தெரிவித்தனர்.
முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...
மூலம்AdminAugust 21, 2025இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...
மூலம்AdminAugust 20, 2025வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...
மூலம்AdminAugust 20, 2025ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...
மூலம்AdminAugust 20, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட