முகப்பு இலங்கை இலங்கையில் மின்சார கட்டண உயர்வு – CEB 18.3% உயர்வு முன்மொழிவு!
இலங்கைசெய்திசெய்திகள்

இலங்கையில் மின்சார கட்டண உயர்வு – CEB 18.3% உயர்வு முன்மொழிவு!

பகிரவும்
பகிரவும்

இலங்கை மின்சார சபை (CEB) ஜூன் மாதம் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கு மின்சார கட்டணத்தை 18.3% உயர்த்தும் முன்மொழிவை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

இந்த உயர்வு, CEB இன் முதல் காலாண்டில் ஏற்பட்ட ரூ.18 பில்லியன் இழப்பை ஈடுசெய்யும் நோக்கத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

PUCS, இந்த முன்மொழிவை தற்போது பரிசீலித்து வருவதுடன், பொதுமக்களின் கருத்துக்களையும் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய கட்டண மாற்றம் ஜனவரி 17, 2025 அன்று நடைமுறைக்கு வந்தது, அதில் 20% வரை கட்டண குறைப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய உயர்வு, அந்த குறைப்பின் பின்னர் ஏற்பட்ட நிதி இழப்புகளை சமன்செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையில் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...