முகப்பு இலங்கை ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!
இலங்கைசெய்திசெய்திகள்

ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!

பகிரவும்
பகிரவும்

குழந்தை என்னும் பாதுகாப்பற்ற வயதிலே, 14 வயது பள்ளி மாணவியொருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 53 வயது குடும்பத்தாரான நபர் ஹபுத்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஹபுத்தலையின் கல்பன் தோட்டத்தில் வசிக்கும் மாணவியுடன் இடம்பெற்றுள்ளது. இவர் இப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் Grade 10 இல் கல்வி பயின்றுவருகிறார்.

வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட நிலையில், மாணவியின் தாயார் அவரை பங்கேதிய கிராம மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்து டியத்தலாவா அடிப்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மாணவி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்த விசாரணைகளில், மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில் சந்தேகநபர் வீடிற்கு நுழைந்து பலாத்காரம் செய்துள்ளமை வெளியாயுள்ளது. மாணவியின் வாக்குமூலப்படி, கடந்த ஆண்டு டிசம்பரிலும், இவ்வருடம் ஜனவரியிலும் அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலம் பல அடுக்குகளில் பாதிக்கப்படக்கூடிய நிலையில், குற்றவாளிக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது சமூகத்தின் வலியுறுத்தலாகும்.

மேலும் விசாரணைகள் ஹபுத்தலை பொலிஸ் நிலைய அதிகாரி சேபால ரத்னாயக்கா தலைமையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரூவன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...