முகப்பு இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

பகிரவும்
பகிரவும்

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது பல பக்தர்கள் புடை சூழ தீர்த்தக் குழுவினரால் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.

தீர்த்தம் எடுக்கப்பட்ட உப்பு நீரில் விளக்கெரியும் அதிசய சங்கல்பத்தை வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை வரை காட்ட விநாயகர் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களிக்கலாம்

அதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் மடை என்பன வைகாசி விசாக அதிகாலை வேளையில் அதிசயங்கள் பல நிறைந்த பத்தாம் பளை என அழைக்கப்படும் வாற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த தீர்த்தமெடுக்கும் அற்புதமான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுக்கும் அற்புதக் காட்சியை கண்டு களித்து நடைபவணியாக தற்போது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை காணக் கூடியதாக உள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வொஷிங்டன் வெனடாச்சி பகுதியில் தந்தையுடன் சென்ற மூன்று சகோதரிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு – தந்தை தலைமறைவு!

கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெனடாச்சி பகுதியில் தங்களது தந்தையுடன் காரில் சென்ற சிறுமிகள்...

இலங்கை வெப்ப ஆபத்துப் பட்டியலில்! – உலக வங்கி எச்சரிக்கை!

இலங்கையோடு சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் தற்போது வெளியில் வேலை செய்ய பாதுகாப்பில்லாத...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 5 (வியாழக்கிழமை)

🔥 மேஷம் (Aries) தொழிலில் புத்துணர்ச்சி, மேலதிகரிடம் பாராட்டு. உறவுகளில் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்...

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...