முகப்பு இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

பகிரவும்
பகிரவும்

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது பல பக்தர்கள் புடை சூழ தீர்த்தக் குழுவினரால் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.

தீர்த்தம் எடுக்கப்பட்ட உப்பு நீரில் விளக்கெரியும் அதிசய சங்கல்பத்தை வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை வரை காட்ட விநாயகர் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களிக்கலாம்

அதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் மடை என்பன வைகாசி விசாக அதிகாலை வேளையில் அதிசயங்கள் பல நிறைந்த பத்தாம் பளை என அழைக்கப்படும் வாற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த தீர்த்தமெடுக்கும் அற்புதமான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுக்கும் அற்புதக் காட்சியை கண்டு களித்து நடைபவணியாக தற்போது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை காணக் கூடியதாக உள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...