யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:
இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஹயஸ் ரக வாகனம் கடலுக்குள் பாய்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், பொன்னாலை பாலத்தடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் பாலத்தின் பாதுகாப்புசுவரை மோதி கடலுக்குள் வீழ்ந்துள்ளது.
விபத்து நேரத்தில் வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்தார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது நேரில் வந்த தகவல். எனினும், வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்தை பதிவிட