2025 ஜூன் 6 | தமிழ்தீ பிரதிநிதி
இலங்கையிலுள்ள துணை சுகாதார ஊழியர்கள் (Supplementary Medical Professionals), தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது வரையிலும் தீர்வு காணப்படாத நிலையில், வேலைநிறுத்தத்தை இரண்டாவது நாளாகவும் தொடர முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் மருத்துவ ஆய்வக நிபுணர்கள், மருந்தக ஊழியர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட ஐந்து முக்கிய பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
பதவி உயர்வுகளில் உள்ள தாமதம்
-
பட்டதாரி நியமனங்களில் உள்ள சிக்கல்கள்
-
ஊதிய, அனுமதித் திட்டங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள்
-
ஓய்வூதிய நிபந்தனைகளின் மேம்பாடு
-
பயிற்சி மற்றும் இடமாற்ற சிக்கல்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணி பகிஸ்தாரிப்பில் ஈடுபட்டனர்
இவை தொடர்பான அரசாங்கத்தின் தொடர்ந்தும் அமைதியான நிலைபாடே, இந்நிலைமைக்கு காரணமென சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலுபோவில, கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தறை, வவுனியா உள்ளிட்ட பல மாவட்ட மருத்துவமனைகளில் CT ஸ்கேன், இரத்த பரிசோதனை, மருந்து விநியோகம், ICU பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறார்க் காப்பு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி போன்ற முக்கியம்செய்யும் கட்டமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிசா கூறுகையில்.”ஊழியர்கள் முதலில் பணிக்கு திரும்பினால் மட்டுமே பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.
JCPSM சங்கம் இதற்கு பதிலளிக்கையில் “அமைச்சின் நிர்வாகத் தவறுகளும், அரசியல் தலையீடுகளுமே நாங்கள் இந்த நிலைமைக்கு வர காரணமாகும்,” எனக் குற்றம்சாட்டியுள்ளது.
கருத்தை பதிவிட