முகப்பு இலங்கை ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

பகிரவும்
பகிரவும்

ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) அவர்கள் இன்று (11) பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் உளமார்ந்த வரவேற்புடன் வரவேற்றார்.

ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் பெல்வீவ் மாளிகைக்கு வருகைதந்தபோது, ஜெர்மன் முப்படை அணியினரால் அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் அணிவகுத்திருந்த முப்படை அணியின் மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இரு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இப்பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இருதரப்பும் விசேட கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய இராசி பலன் – 15 ஆடி 2025 (செவ்வாய்க்கிழமை)!

இன்று சந்திரன் கடக இராசியில் சஞ்சாரம் செய்கிறார். மனசாட்சி பேசியபடியே நடந்தால் பயனளிக்கும் நாள். பக்தியில்...

வாழ்க்கையை உல்லாசப்பயணமாக மாற்றிய இருவர் – குழந்தை மரணம்-இறுதியில் சிறைக்கு வழி!

லண்டன் | ஜூலை 14:கொன்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன் ஆகியோர், “மிகவும் கவனக்குறைவான காரணத்தால்...

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர்...

இன்றைய ராசி பலன் – 14 ஜூலை 2025 (திங்கட்கிழமை)!

இன்று உங்கள் மனதில் எழும் எண்ணங்களை நேர்மையாக செயல்படுத்த நீங்கள் வாய்ப்பு பெறலாம். பெரிய முடிவுகள்...