முகப்பு இலங்கை ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

பகிரவும்
பகிரவும்

ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) அவர்கள் இன்று (11) பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் உளமார்ந்த வரவேற்புடன் வரவேற்றார்.

ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் பெல்வீவ் மாளிகைக்கு வருகைதந்தபோது, ஜெர்மன் முப்படை அணியினரால் அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் அணிவகுத்திருந்த முப்படை அணியின் மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இரு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இப்பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இருதரப்பும் விசேட கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுஆய்வு பெறுபேறுகள் வெளியீடு

கொழும்பு – இலங்கைத் பரீட்சைத்திணைக்களம் அறிவித்ததாவது, 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் தேர்வின் மறுஆய்வு...

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...