முகப்பு இலங்கை முல்லைத்தீவில் கடைத்தொகுதி தீப்பற்றி எரிகிறது – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

முல்லைத்தீவில் கடைத்தொகுதி தீப்பற்றி எரிகிறது – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு – ஜூன் 16:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் உள்ள பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல கடைகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீயின் பரவல் தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் விஷயம், பலத்த காற்று வீசும் சூழ்நிலை. அதனால்தான் தீப் பரவல் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. தீச் சுவாலைகள் பல மடங்கு தாண்டி காற்றில் பறந்து செல்லும் விதத்தில் பரவல் நடக்கின்றது.

மக்கள் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக மிக மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தீயணைப்பு துறையின் பிரிவு முல்லைத்தீவில் இல்லாததால், இவ்விசேட சூழ்நிலையில் இராணுவத்தின் உடனடி உதவி நாடப்பட்டுள்ளது. தற்போது, படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...