இண்டோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லாகி-லகி எரிமலை நேற்று (ஜூன் 17) காலை வலுவான வெடிப்புடன் தீவிர சாம்பல் மற்றும் கற்கள் வெளியேற்றத்தை நிகழ்த்தியது. இந்த வெடிப்பால் வானில் சாம்பல் மேகங்கள் 11 கிலோமீட்டர் உயரம் வரை சென்றுள்ளதாகவும், அதன் தாக்கம் பல வட்டாரங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இண்டோனேசியா அரசின் புவிச்சரிதவியல் மற்றும் எரிமலைக் கண்காணிப்பு மையம் இந்த எரிமலையின் எச்சரிக்கை நிலையை அதிகபட்சமான 4ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள 8 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள Boru, Hewa, Watobuku, Nurabelen, Nileknoheng போன்ற கிராமங்கள் மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளன. சாம்பல் மழை மற்றும் கற்கள் விழும் அபாயத்தின் காரணமாக மலையருகே அமைந்திருந்த கண்காணிப்பு நிலையம் கூட வெறிச்சோடப்பட்டது.
Indonesiaமேலும், இந்த வெடிப்பால் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலி நோக்கி மற்றும் பாலியில் இருந்து புறப்படும் விமானங்கள் பலரும் ரத்து செய்யப்பட்டுள்ளன. Singapore Airlines, Scoot, Jetstar, Air India, Air New Zealand உள்ளிட்ட விமான நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஃப்ளோரஸ் தீவிலுள்ள Fransiskus Xaverius Seda விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்தால், எரிமலிலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் சாம்பலுடன் கலந்த களிமண் வெள்ளம் (lahar) ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முந்தைய வெடிப்புகள் 2024 நவம்பர், 2025 மார்ச் மற்றும் மே மாதங்களில் நிகழ்ந்துள்ளன. 2024ஆம் ஆண்டு நிகழ்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இண்டோனேசியா முழுவதும் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானப் பயணிகளும், மக்களும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்தை பதிவிட