அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடாஞ்சு மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளன என்றும், தற்போது அனைத்து அமெரிக்க விமானங்களும் ஈரானிய வான்வெளியிலிருந்து வெளியேறியுள்ளன என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இஸ்ரேல் படைகள் தற்போது ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிவருகின்றன. இதற்கு முன்னதாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி பல ட்ரோன்களை ஏவியது.
இவ்விடையே, டிரம்ப் அவரது தேசிய உளவுத்துறை இயக்குநராக உள்ள டல்சி கேபார்டை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்ற அவரது கூற்று தவறானது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 400க்கும் மேற்பட்ட மக்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் குறைந்தது 3,056 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஈரானின் தாக்குதல்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்தை பதிவிட