முகப்பு அரசியல் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம் – நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரானில் அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம் – நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடாஞ்சு மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளன என்றும், தற்போது அனைத்து அமெரிக்க விமானங்களும் ஈரானிய வான்வெளியிலிருந்து வெளியேறியுள்ளன என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இஸ்ரேல் படைகள் தற்போது ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிவருகின்றன. இதற்கு முன்னதாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி பல ட்ரோன்களை ஏவியது.

இவ்விடையே, டிரம்ப் அவரது தேசிய உளவுத்துறை இயக்குநராக உள்ள டல்சி கேபார்டை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்ற அவரது கூற்று தவறானது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 400க்கும் மேற்பட்ட மக்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் குறைந்தது 3,056 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஈரானின் தாக்குதல்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...