ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இன்று (ஜூன் 27) பிற்பகல் 12.18 மணியளவில் நவல பகுதியில் ஊழல் மற்றும் பொது நிதியை தவறான முறையில் பயன்பட்டுள்ளதற்கான குற்றச்சாட்டுகளுக்கமைவாக, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு மேல் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு ஜூலை 01ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் தலைவராக பதவியில் இருந்த காலத்தில் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு தொடர்புடையவை. இந்த விசாரணை மூன்று தனித்தனியான ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதல் குற்றச்சாட்டு படி, 2014 ஜனவரி 22ஆம் தேதி மலேசியா – கோலாலம்பூரிலிருந்து இலங்கையின் கடுநாயக்கவிற்கு பயணிக்கவிருந்த UL319 விமானத்தின் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றச்சாட்டில், 2014 ஜனவரி 26ஆம் தேதி, மாலத்தீவிலிருந்து இலங்கைக்கு வந்த 75 பயணிகள், UL563 விமானம் மூலம் பிரான்ஸுக்குப் பயணிக்கவிருந்த நிலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து 19,160 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது குற்றச்சாட்டாக, 2014 டிசம்பர் 19ஆம் தேதி கடுநாயக்க 18வது மைல் திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நிகழ்விற்காக அரச நிதியாக ரூ.12,50,000 வரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் முதலாமைத் தலைவி ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் ஆவார். அவர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் எயர் நிறுவனங்களுக்கு தலைமை வகித்திருந்தவர்.
இந்த வழக்கு, நாட்டில் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக அவதானத்தை பெற்றுள்ள ஒரு முக்கியமான ஊழல் வழக்காகக் கருதப்படுகிறது.
கருத்தை பதிவிட