பாங்கி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு:
மத்திய ஆப்பிரிக்காவின் தலைநகரமான பாங்கியில் உள்ள பார்திலேமி போகண்டா அரசு உயர்தர பாடசாலையில், பரீட்சை நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின் வெடிப்பால் ஏற்பட்ட பரபரப்பால் ஏற்பட்ட நெரிசலில் 29 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் 2025 ஜூன் 25ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சுமார் 5,000 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்காக பாடசாலை வளாகத்தில் கூடியிருந்த வேளையில், மின்மாற்றி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு, பயங்கர பீதி மற்றும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
-
பல மாணவர்கள் மாடியில் இருந்து கீழே பாய்ந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
-
ஒரு சிறிய வெளியேறும் வாயிலே அனைத்து மாணவர்களும் ஓடிச் செல்ல முற்பட்டமையால் மரணங்கள் அதிகரித்துள்ளன.
-
சில மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளளர்; மேலும் சிலர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
அரசு பதில் நடவடிக்கைகள்:
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி ஃபாஸ்தின்-ஆர்சாஞ்ச் டூஅடேரா, நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துயரநாளாக அறிவித்துள்ளார்.
அதிகாரிகள் தற்போது விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், காயமடைந்த மாணவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சோக நிகழ்வுக்குப் பின்னணி அரசு அலட்சியம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
பாடசாலையின் மின் வசதிகள் பழுதடைந்த நிலையில் இருந்தன என்பது மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“பிள்ளைகள் கல்வியை நாடி சென்ற இடத்தில் உயிரிழக்க வேண்டிய நிலைமைக்கு காரணம் யார்?” என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
கருத்தை பதிவிட